திருவண்ணாமலை, நவ.14: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 4 ஊராட்சி செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சு.ஆண்டாப்பட்டு, தலையாம்பள்ளம், வெைறயூர், இசுக்கழிகாட்டேரி ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகளுக்கு விண்ணப்பிவர்கள் கல்வி தகுதி, இருப்பிடம், சாதி சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராம ஊராட்சி பணியிடத்துக்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.