தேவதானப்பட்டி, நவ. 14: பெரியகுளம் பகுதியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் கரும்பு பயிரில் பூச்சி மேலாண்மை குறித்த செயல் விளக்கம் செய்தனர். உசிலம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணா வேளாண்மை தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் பெரியகுளம் பகுதியில் தங்கியுள்ளனர். இவர் நேரடியாக விவசாயிகளின் விளைநிலங்களுக்கு சென்று, அவர்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு ஏற்ப பூச்சி தாக்குதல், நோய் தடுப்பு முறை, அதிக மகசூலுக்கான வழிமுறை, இயற்கை சாகுபடியின் பயன்கள் உள்ளிட்டவைகள் பற்றி விவசாயிகளின் அனுபவங்களை கேட்டறிந்தனர்.