திருச்செங்கோடு, நவ.14: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் நடனசபாபதி தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கினார். இதில் துணை செயலாளர்கள் செல்வராஜ், சேகர், பொருளாளர் குமார், தலைமை செயற்குழு யுவராஜ், பொதுக்குழு அன்பழகன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் பரமானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் 16ம் தேதி மாலை 6 மணிக்கு திருச்செங்கோடு தேர்நிலை அருகில் பொதுக்குழு தீர்மானங்களை விளக்கும் பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவானது. மேலும், உள்ளாட்சி தேர்லில் போட்டியிட விரும்புபவர்கள், அதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செயது 20ம்தேதிக்குள் மாவட்ட அலுவலகத்தில ஒப்படைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.