பனங்கன்று வழங்கும் விழா

சேந்தமங்கலம், நவ.14:  சேந்தமங்கலம் அடுத்துள்ள பேளுக்குறிச்சியில், பனங்காட்டு மக்கள் கழகத்தின்  சார்பில், நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்றும் விழா நடந்தது.  கொங்குநாடு சான்றோர் சங்கத்தலைவர் உதயா வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.  நாடார்  சங்க தலைவர் மாதேஷ்வரன் முன்னிலை வகித்தார். இதில் நிறுவனர் சுபாஷ்  பண்ணையார் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட  உதவிகள்  மற்றும் பனங்கன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள்  சிலுவை வரதராஜன், மோகனவேல், ஆறுமுகம், சேகர், தினேஷ் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: