காளையார்கோவில், நவ.14: காளையார்கோவில் பஸ்நிலையத்தைச் சுற்றி டூவீலர்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துவதால் விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. காளையார்கோவில் பஸ்நிலையத்தில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சொர்ணகாளீஸ்வரர் ஆலயம் செல்லும் இரண்டு வழிகளிலும் டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் முதல் அப்பகுதிகளில் உள்ள வீடுகள், மருத்துவமனை, தாலுகா அலுவலகங்களுக்கும் செல்லும் பொதுமக்களுக்கும் மிகுந்த சிரப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.