கிருஷ்ணகிரி, நவ.14: கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், மாநில பொது செயலாளர் சந்திரமோகன் தலைமையில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடத்த வேண்டும். கிராமப்புற பள்ளிகளில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து மூட வேண்டும். தரமான சத்துணவை வழங்க வேண்டும். பழைய பொருட்களை கொண்டே மாணவர்கள் புராஜக்ட் செய்ய, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.