காங்கயம், நவ.14: காங்கயம் அருகே விவசாய நிலத்தை தனியார் வெடி மருந்து தொழிற்சாலை நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
காங்கயம் தாலுகா, ஊதியூர் கிராமம், அருந்ததியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(58), விவசாயி. இவர் காங்கயம் வட்டாட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: ‘‘30 வருடங்களுக்கு முன்பு அரசு சார்பில் எனக்கு இரண்டரை ஏக்கர் நிலம் வழங்ககப்பட்டது. அதில் தற்போது நான் விவசாயம் செய்து வருகிறேன். இந்நிலையில், எனது நிலத்துக்கு அருகே செயல்பட்டு வரும் தனியார் வெடிமருந்து தொழிற்சாலை நிறுவனத்தினர் எனது நிலத்தில் 25 சென்ட் பகுதியை ஆக்கிரமித்துள்ளனர்.