சென்னை: பஸ் பாஸ் கேட்டதால் ஆத்திரமடைந்து நடத்துனரின் சட்டையை பிடித்து தாக்க முயன்ற, குடிபோதையில் இருந்த மாநில கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (தடம் எண் 27பி) பேருந்து கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி நேற்று முன்தினம் மாலை வந்தது. திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் வரும்போது மாநில கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறினர். அவர்களிடம் நடத்துனர் கோபிநாத் பஸ் பாஸ் காட்டும்படி கேட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த இரண்டு மாணவர்கள் “எங்களிடமே பாஸ் கேட்பதா” என்று கூறி நடத்துனர் கோபிநாத் சட்டையை பிடித்து தகாத வார்த்தைகளில் பேசி தாக்க முயன்றனர். இதனால் நடத்துனருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.