புதுச்சேரி, நவ. 13: புதுச்சேரி ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிகழ்ச்சி மேலாளர் செல்வமுருகன் அளித்த பேட்டி: 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு சட்ட திட்டங்கள் உள்ளன. அதனை நடைமுறைப்படுத்தினாலும், சிறிய மாநிலமான புதுச்சேரியில் நிறைய தவறுகள் நடக்கிறது. எனவே, கண்டிப்புடன் சட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே சமயத்தில் சைல்டு லைன் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அவசியம் தேவை. அப்போதுதான் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறையும். புதுச்சேரியில் 59 குழந்தை காப்பகங்கள் உள்ளன. அங்கு 18 வயதுக்குட்பட்ட 1,515 பேர் உள்ளனர். அவர்களது பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து அடிக்கடி ஆய்வு செய்து வருகிறோம்.