கடலூர், நவ. 13: கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். கெடிலம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கடலூர் அரசு பொது மருத்துவமனை போதிய சுகாதாரமின்மை மற்றும் தூய்மை இன்மை காரணத்தால் புதர்மண்டி கிடைக்கிறது. இதுபோன்று சாக்கடை நீர் வழிந்தோடுகிறது. இதனால் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் நோயாளிகளின் தரப்பினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டு பகுதிக்கு அருகில் நல்ல பாம்பு ஒன்று சென்றது. இதைப் பார்த்த நோயாளிகள் பதறி ஓடினர். மேலும் அவரது உறவினர்களும் சிதறி ஓடினர்.