வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகை திருட்டு

சேந்தமங்கலம், நவ.13: புதுசத்திரம் அடுத்துள்ள கூனவேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன்(65). தறிதொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி பெங்களூரிலும், மகளுக்கு திருமணமாகி குமாரபாளையத்திலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி மாதேஸ்வரன் தனது மனைவியுடன் குமாரபாளையத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7.5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, மாதேஸ்வரன் புதுச்சத்திரம் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: