மரக்கன்று நடும் விழா

வேப்பூர், நவ. 13: கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள் மூலம் இலுப்பை, வேம்பு, புங்கன், மா உள்ளிட்ட பல்வேறு வகையான 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மங்களூர் அடுத்த மா.புடையூர் ஊராட்சியில் நடைபெற்ற மரக்கன்று நடும் பணியை கடலூர் மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட உதவி இயக்குனர் முருகன், ராஜேந்திரன், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.     இதில் ஊராட்சி செயலர் மதிவாணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: