மனைவியுடன் தகராறு: கணவன் தற்கொலை

புவனகிரி, நவ. 13: புவனகிரி அடுத்த மருதூர் அருகே உள்ள பு.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமூர்த்தி(45). சம்பவத்தன்று இவருக்கும், இவரது மனைவி லட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது.

இதில் மனமுடைந்த செல்வமூர்த்தி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் அது பலனின்றி செல்வமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி லட்சுமி மருதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: