சாராயம் கடத்திய 2 பேர் கைது

திட்டக்குடி, நவ. 13: ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது எழுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற ஒரு நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் 2 லாரி டியூப்புகளில் 110 லிட்டர் சாராயம் கடத்தி சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் எழுத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் (38) என தெரியவந்தது. இதேபோல் கொரக்கவாடி ஊராட்சி குடிக்காடு அம்மாகுளம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (52) என்பவர் வீட்டின் பின்புறம் 2 பிளாஸ்டிக் கேன்களில் வைத்திருந்த 110 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கை கைப்பற்றினர்.

Related Stories: