வயல்வெளியில் பைக் பாய்ந்து ஒருவர் பலி

விருத்தாசலம், நவ. 13: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் செந்தில்குமார் (35). இவர் அதே பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் சதீஷ்குமார்(25) உடன் பைக்கில் விருத்தாசலம் சென்றுவிட்டு திரும்ப ஊருக்கு சென்று கொண்டிருந்தார். பைக்கை சதீஷ்குமார் ஓட்டிச் சென்றார். செந்தில்குமார் பின்னால் உட்கார்ந்து கொண்டு சென்றார். ஆலிச்சிக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலைதடுமாறி அருகிலுள்ள வயல்வெளியில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயத்துடன் உயிர் தப்பிய சதீஷ்குமாரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி கொடுத்த புகாரின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: