சிதம்பரம், நவ. 13: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி நடந்தது. திறன் மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் மாலதி, இலவச திறன் பயிற்சி பற்றி விளக்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், திறன் மேம்பாட்டு மையமும், இந்திய அரசின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து இந்திய அரசின் சான்றிதழுடன் கூடிய 3 மாதங்கள் வரையிலான திறன் பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக நடத்தப்படும். பயிற்சி கால இறுதியில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும், தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என கூறினார்.