தர்மபுரி, நவ.13: காரிமங்கலத்தில் 2 வீடுகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தட்டரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). விவசாயி. இவர் கடந்த 10ம் தேதி வெளியூரில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.