தர்மபுரி, நவ.13: அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கலையரங்கம் அமைத்துத் தரவேண்டும் என தர்மபுரியில் நடந்த தமிழ்நாடு நாடகம், நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க, தர்மபுரி மாவட்ட கிளை சார்பில், முதல் மாநாடு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், பெரியார் மன்றத்தில் நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு, மாநில துணை தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில கவுரவ ஆலோசகர் சிங்காரவேலன் கலந்து கொண்டு பேசினார். மாநில இணை செயலாளர் முருகசாமி, மாநில அமைப்பு செயலாளர் சாரதி, மாநில நிர்வாகிகள் செந்தில், முனியப்பன், சின்னசாமி, வேலவன், குணசேகரன், அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.