திருக்காம்புலியூர் கார்னர் அருகில் கோழி இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

கரூர். நவ. 13: கோழிஇறைச்சிக்கழிவு காரணமாக சுகாதார கேடு ஏற்படுகிறது.கரூர்- மதுரைபைபாஸ் சாலையில் திருக்காம்புலியூர் கார்னர் அருகே கழிவுபொருட்களை மூட்டையாக கொண்டு வந்து வீசி விட்டு போய் விடுகின்றனர். விடுமுறை நாட்களில் அதிக அளவில் சாலையோரம் கோழி இறைச்சிக் கடைகளை அமைத்து விற்பனை செய்கின்றனர். விற்பனை முடிந்ததும் குப்பைகளை முறையாக அகற்றாமல் அருகில் பைபாஸ் சாலையில் கொண்டு வந்து வீசி விட்டு போய் விடுகின்றனர். இதேபோன்று மேற்கண்ட இடத்தில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.தற்போது பிளாஸ்டிக் கழிவுகளையும் வீசி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார கேடு ஏற்படுவதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: