அரவக்குறிச்சி, நவ. 13: அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் அதிக அளவில் காய்ச்சல் பரவுவதால் ஏழை எளிய பொதுமக்கள் நலன் கருதி கிராமங்களில் அரசின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி ரத்தப் பரிசோதனை வசதியுடன் சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர், ஈசநத்தம், அம்மாபட்டி, எறுமார்பட்டி, பெரியமஞ்சுவளி, சாந்தப்பாடி உள்ளிட்ட 20 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சியின் கிராமங்களில் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு சளி, தொண்டை வலி காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதில் சிறு குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.