புதுக்கோட்டை, நவ.13: யூரியா உரத்தினை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான அளவு யூரியா உரம் பெறப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் யூரியா உரத்தினை அரசு நிர்ணயித்த விலைக்கு கூடுதலாக விற்பனை செய்யக் கூடாது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிருக்கு தேவையான யூரியா உரம் பல்வேறு உர உற்பத்தி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டு மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே தேவைப்படும் விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு செல்லும்போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் வாங்கி பயனடையலாம்.