நெற்பயிருக்கு துத்துநாக நுண்ணூட்டச்சத்து அவசியம்

அரியலூர், நவ.13:நெல் பயிர் சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மைக்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ரசாயன உரங்களில் பேரூட்டச்சத்துக்களான தழைச்சத்து ,மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் நண்ணூட்டச் சத்துக்களை அதிலும் குறிப்பாக துத்தநாக சத்தினை(சிங் சல்பேட்) பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை. நெற்பயிரில் விளைச்சலில் துத்தநாக சத்தின் பங்கானது மிகவும் இன்றியமையாததாகும். நெற்பயிரில் பச்சையம் உருவாவது தொடங்கி பல்வேறு உயிர்வேதி விளைகளில் துத்தநாகம் உதவுகிறது. துத்தநாகம் அளிக்க இயலாத சூழ்நிலையில் விளைச்சலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். துத்தநாக சத்தின் குறைபாட்டிற்கான காரணம் அதிக கார அமில மண்( பிஎச் 7க்கு மேல்)தொடர்ந்து வயலில் நீர்தேக்கி வைப்பது ,பாசன நீரில் அதிக அளவு பைக்காப்பனேட் உப்பின் அளவு இருத்தல் ,அதிக அளவு மணிச்சத்து உரங்கள் வயலில் இடுதல் ,தழைச்சத்து உரமாக தொடர்ந்து யூரியா பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணில் உள்ள துத்தநாகச் சத்தினை பயிர்கள் எடுத்துக்கொள்வதால் உண்டாகும் பற்றாக்குறையை மேலும் களர் நிலங்கள் மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள மணி ஆகிய நிலங்களில் துத்தநாகச்சத்தானது பயிருக்கு கிடைப்பதில்லை.

பயிர்களில் துததநாக சத்தின் செயல்பாடுகளான துத்தநாகம் பயிர்களின் செல்களிலுள்ள பல்வேறு நொதிகளிலும்,உயிரணுக்களில் உள்ள ரைபோநியூக்கிலிக் அமிலத் தயாரிப்பிலும் பங்கு பெறுகிறது.செல்களில் உள்ள சைட்டோ பிளாசத்தின் ரைபோசு என்ற சர்க்கரை ப் பொருளில் அளவை கட்டுப்படுத்த தேவைப்படுகிறது.பயிர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆக்ஸின் தயாரிப்பதற்கும் ,பயிர்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்களுக்கும் துத்தநாகம் தேவைப்படுகிறது.துத்தநதகம் பற்றாகுறையால் உண்டாகும் சேத அறிகுறிகளான நெல்பயிரில் துத்தநாக க் குறைபாடானது நடவு வயலில் நான்கு வாரத்திற்குள் காணப்படும் இளம் இலைகளின் நடு நரம்பு அடிப்புறத்திலிருந்து வெளுத்துக்கானப்படும்.மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும் இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பழுப்படைந்து காய்ந்து விடும்.பயிர்கள் சீராக வளராமல் திட்டு திட்டாக வளர்ச்சி குன்றி காணப்படும்.இதனை நிவர்த்தி செய்யும் வரிமுறைகளாக வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருப்பது நெற்பயிரில் துத்தநாகம் பற்றாகுறை ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணம்.எனவே காய்ச்சலும்,பாய்ச்சலும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வயலில் எப்பொழுதும் தண்ணீர் தேங்காவண்ணமும் ,போதுமான ஈரப்பதம் மட்டும் இருக்கமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்ட உரம் இடுதல் வேண்டும். பசுந்தாள் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை அதிகளவு வயலுக்கு இடுதல் வேண்டும். நெற்பயிரையே தொடர்ந்து சாகுபடி செய்யாமல் பயறுவகை பயிர்கள் ,எண்ணை வித்துக்கள் சாகுபடி செய்ய வேண்டும்.அடியுரமாக துத்தநாக சல்பேட் நுண்ணூட்டம் இடவில்லையெனில் இலைவழி தெளிப்பாக ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 1 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் களந்து தெளிக்க வேண்டும்.

இவ்வாறு வேளாண் ேபராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: