மேச்சேரி, நவ.13: முதல்வர் பாதுகாப்பு பணிக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த போலீஸ்காரரின் உடல் 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மல்லிகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ்(27). இவர், ஈரோடு ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பாரதியும் ஈரோடு ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்கள் ஈரோடு மாவட்டம் கோபி அருகே கள்ளிப்பட்டியில் 2 மகன்களுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து பவானி, ஈரோடு வழியாக கோவைக்கு சென்றார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக வரதராஜ் தனது டூவீலரில் கள்ளிப்பட்டியிலிருந்து சித்தோடுக்கு சென்று கொண்டிருந்தார்.