பாலக்கோடு அருகே சோளக்காட்டிற்கு துக்கிச்சென்று மாணவி பலாத்கார முயற்சி

பாலக்கோடு, நவ.13: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாஸ்திரமுட்லு கிராமத்தில் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். விவசாயி. இவரது மகள் சாஸ்திரமுட்லு அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து விட்டுக்கு 5.30 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த ராஜா மகன் அப்பு என்ற முனியப்பன் (26), என்பவர் பெட்டமுகிலாளம் மலைப்பகுதிக்கு சென்றுவிட்டு, ஊருக்கு டூவிலரில் திரும்பினார். அப்போது தனியாக வந்த மாணவியை வழிமறித்து, சோள காட்டிற்கு குண்டு கட்டாக தூக்கிச் சென்றார். மாணவியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மாணவி அலறி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது மாணவியை பாலியல் பலாத்கார முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முனியப்பனை தாக்கினர். பின்னர் மாரண்டஅள்ளி காவல்நிலையத்தில் முனியப்பனை ஒப்படைத்தனர். மாரண்டஅள்ளி போலீசார் முனியப்பனை உடனே பாலக்கோடுக்கு அழைத்துச் சென்றனர். வழக்குப்பதிவு செய்து அந்த பாலிரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி, மாரண்டஅள்ளி காவல் நிலையத்தை ஊர் பொது மக்கள் முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இரவு 10 மணிக்கு மேலும் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட நிலையில் இருந்தனர். போலீசார் அவர்களிடம் சமாதானத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த, பாலக்கோடு தாசில்தார் ெவங்கடேஸ்வரன் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ேபச்சு வார்த்தை நடத்தினார். முனியப்பன் மீது, மகேந்திரமங்கலம் ேபாலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே பலாத்கார வழக்கு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் மாரண்டஅள்ளி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: