வேதாரண்யம் பகுதியில்ஆயுதங்களுடன் சுற்றிய 3 வாலிபர்கள் கைது

வேதாரண்யம், நவ.13: வேதாரண்யம் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி தலைமையில் போலீசார் இரவு நேர ரோந்துப் பணியை மேற் கொண்டனர். அப்போது மருதூர் கடைத்தெருவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கம்பி, அரிவாள் உள்ளிட்ட பயங்கரஆயுதங்களுடன் மூன்றுபேர் சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியை சேர்ந்த பாப்பையன் மகன் கிருஷ்ணமூர்த்தி(25), வாய்மேடை சேர்ந்த செல்வராஜ் மகன் அருள்ராஜ் (25) முருகையன் மகன் காளிதாஸ் (29) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

Related Stories: