கொள்ளிடம், நவ.13: நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வயல்வெளிப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் அருகே சாமியம் கிராமத்தில் விவசாயிகளுக் கென்று வயல்வெளிப்பள்ளி நடைபெற்றது.
கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை வகித்து வயல்வெளிப்பள்ளியை துவக்கி வைத்து பேசினார். அப்போது, அவர் பேசுகையில் கொள்ளிடம் வட்டாரத்தில் 15 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வயல்வெளிப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் 25 விவசாயிகள் இருப்பார்கள்.