இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி

திருச்சி, நவ.13: திருச்சியில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றம் ஆராய்சி மையத்தில் நாளை (14ம் தேதி) தொடங்கும் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சிக்கு தகுதியானோர் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருச்சி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் 14ம் தேதி மற்றும் 15ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டு இனங்கள், ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குதல், தீவனமேலாண்மை, தீவன மரங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு, நோய்தடுப்பு முறைகள், ஆலோசனை மற்றும் தொழிஆகியவைகள் குறித்து 2நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர விரும்புவோர் நாளை  காலை 10 மணிக்கு நேரில் வரவேண்டும். விபரங்களுக்கு 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்சி மைய தலைவர் ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: