பாலித்தீன் பயன்பாட்டை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

ஆர்.எஸ்.மங்கலம், நவ.13: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மண் வளம் பதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் பாலித்தீன் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. பாலிதீன் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்ற இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், திருப்பாலைக்குடி, ஆனந்தூர், சனவேலி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில பெட்டிக்கடை முதல் டீக்கடை,பேக்கரி, ஹோட்டல்களிலும் பாலித்தீன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலித்தீன் பயன்பாட்டை தடை செய்வதற்கு முக்கிய நோக்கம் மழை பெய்யும் போது மழைநீரை நிலத்தடிக்கு செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்ததாக இல்லாமல் மாசுபடுகிறது என்பதற்காகவே தான்.

இதற்கு எதிராகவே பாலித்தீன் கவர்களில் டீ, காபி மற்றும் ஹோட்டல்களில் சட்னி-சாம்பார் போன்றவற்றை சூடாக கட்டிக் கொடுத்து விடுகின்றனர். இதனால் மக்களுக்கு உடல் உபாதை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் மீண்டும் மீண்டும் இந்த தவறை கடைக்காரர்கள் செய்கிறார்கள். பெரும்பாலான ஹோட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பாலித்தீன் கவர் மற்றும் பாலித்தீன் சீட், கம்ப்யூட்டர் இலை என்று சொல்லக் கூடிய ரசாயனம் பூசப்பட்ட இலைகள் பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ளது. ஆரம்பத்தில் வேகமாக சோதனை செய்த அதிகாரிகள் தற்போது சோதனை செய்யாமல் சோர்வடைந்துள்ளனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவேண்டிய சுகாதாரத்துறையும், உணவு பாதுகாப்பு துறையும் முனைப்புடன் செயல்படாமல் வேடிக்கை பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: