வேலூர், நவ.13: வேலூர் சின்ன அல்லாபுரத்தில் மேல்நிலைநீர்த்தேக்க ெதாட்டியில் இருந்து நிரம்பி வழியும் குடிநீர் சாலையில் ஓடி வீணாகிறது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வேலூர் சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த குடிநீர் தொட்டி தினமும் நிரம்பி வழிகிறது. இவ்வாறு நிரம்பி வழியும் தண்ணீர் அங்குள்ள தெருக்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது. மேலும் இந்த தண்ணீர் அங்குள்ள பள்ளங்களில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது.