காவேரிப்பாக்கம், நவ.13: காவேரிப்பாக்கம் அருகே ரபி பருவத்தில் பயிரிட்ட நெல் கதிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் அடி பாதளத்துக்கு சென்றடைந்தது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கினர். அதேபோல் விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய தொடங்கியது.