பந்தலூர், நவ. 13 : பந்தலூர் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நேற்று நடந்தது. பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார், தனிவட்டாட்சியர் லதா முன்னிலை வகித்தார் விஏஒ யுவராஜ் வரவேற்றார். பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதிகளில் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காலை 9 மணிமுதல் காத்திருந்தனர். ஊட்டியில் இருந்து மருத்துவர்கள் 12 மணிக்கு மேல் வருகை புரிந்ததால் மாற்றுத்திறனாளிகள் காத்திருந்து நொந்து போயினர். அதன் பின் மனநலம் மருத்துவர் பூர்னஜித், நரம்பியல் மருத்துவர் வினோத் ஆகியோர் வருகை தந்து மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். இம்முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக உதவியாளர்கள் விஜயன், அந்தோணி ஜெரால்டு, சக்தி, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.