ஈரோடு, நவ. 13: ஆழ்துளை கிணறு அமைக்க கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு விபத்து நடந்தால் அந்த விபத்தை தடுப்பதற்கான முயற்சிகளில் அரசு இறங்குவது தேவைதான். ஆனால், நடைமுறை சாத்தியமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலில் இருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலும், கொங்கு மண்டலத்தில்தான் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலை நம்பி இருப்பவர்கள் அதிகம்.