கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல்பெட்டி இணைப்பு

நாகர்கோவில், நவ.13: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு: ரயில் எண் 16317 /16318 கன்னியாகுமரி -  மாதா வைஷ்ணோ தேவி கட்டா - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்காலிகமாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து டிசம்பர் 6ம் தேதி முதலும்,  வைஷ்ணோ தேவி கட்டாவில் இருந்து டிசம்பர் 9ம் தேதி முதலும் கூடுதல் பெட்டி இணைக்கப்படும். சொர்ணூர் யார்டு பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வழித்தடத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 20ம் தேதி ரயில் எண் 16606 நாகர்கோவில்- மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக மங்களூர் சென்றடையும்.

இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: