தென்தாமரைகுளம். நவ. 13: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் அனைவரும் இணைந்து, கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பை துவக்கியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் விடுமுறையில் ஊருக்கு வரும் ராணுவ வீரர்கள் இணைந்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சமூக நலப் பணிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் சாமிதோப்பு அளத்தங்கரை மெயின்ரோட்டில் அமைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை நேற்று சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சிவகுமார் தலைமையில் சாமிதோப்பு ஊராட்சி செயலாளர் காளியப்பன் மற்றும் சாமிதோப்பு மற்றொரு ராணுவவீரர் கோபி ஆகியோர் முன்னிலையில் சுத்தம் செய்து புதிதாக பெயின்ட் அடித்து சீரமைத்தனர்.