நாகர்கோவிலில் 15ம் தேதி நடக்கிறது தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவில், நவ. 13:  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரியசகாய ஆன்டனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நாகர்கோவில்  கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில் வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு தனியார்த்துறை வேலைவாய்ப்பு  முகாம் நடக்கிறது. இதில் குமரி மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின்  பிரதிநிதிகள் நேரடியாக வருகை தந்து தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு  செய்ய உள்ளனர். முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு,   டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள்  கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ள குமரி மாவட்ட பதிவுதாரர்கள் வரும் 15ம்  தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து பயனடையலாம். தனியார்த்துறையில் வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களின்  பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது. இந்த வேலைவாய்ப்பு முகாமில்  கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவன  பிரதிநிதிகள் 04652-264191 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: