நாங்குநேரி, நவ.13:நாங்குநேரி அருகே மூலைக்கரைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முருகன் (57). அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவரது 2வது மகள் கற்பகம்(25) என்பவருக்கும், கழூவூரை சேர்ந்த சின்னத்துரைக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்த ஓராண்டில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக கற்பகம், கணவரை பிரிந்து குழந்தையுடன் மூலைக்கரைப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.