களக்காடு, நவ. 13: களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார், மாவடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நெரிஞ்சிவிளையை சேர்ந்த பாஸ்கர் (45) என்பவர், ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு, அந்த வழியாக செல்வோரை அவதூறாக பேசிக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர்.