காதலன் வீட்டில் இளம்பெண் தஞ்சம் பைக்குகளை சூறையாடிய உறவினர்கள் 3 பேர் கைது

புழல்: புழல் அருகே காதலன் வீட்டில் இளம்பெண் தஞ்சம் அடைந்ததால், ஆத்திரமடைந்து அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த 5 பைக்குகளை சூறையாடிய உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். புழல் சக்திவேல் நகர் 35வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் தீபக் (22). ஐ.டி.ஐ முடித்துள்ளார். செங்குன்றம், பம்மதுகுளம் லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் பிரியா (19). பட்டதாரி.பிரியாவும், தீபக்கும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பிரியா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரியா சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி காதலன் தீபக் வீட்டுக்கு வந்துவிட்டார்.இதனால்  ஆத்திரமடைந்த பிரியாவின் உறவினர்கள் கடந்த 10ம் தேதி காலை தீபக் வீட்டுக்கு வந்து, அங்கு நிறுத்தி இருந்த 5 பைக்குகளை சரமாரியாக அடித்து உடைத்து விட்டு சென்றனர்.இதுகுறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாவின் உறவினர்களான பம்மதுகுளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை (38), வடிவேல் (36), குமார் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், மாதவரம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: