திருவேற்காட்டில் ₹1.33 கோடியில் பூங்காக்கள் திறப்பு

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திறந்தவெளி கட்டண நிதியின்கீழ் பாரதிநகர், பாலகிருஷ்ணன் நகர், நியூ சென்னை மெட்ரோ சிட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் ரூ.1  கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் 4 பூங்காக்கள் கட்டும் பணி நடந்து வந்தது. இதன் பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  பூங்காக்களை திறந்து வைத்து பேசினார்.  நகராட்சி கமிஷனர் சித்ரா, நகராட்சி பொறியாளர் ஆனந்தஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: