சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி ₹1 கோடி பரிசு தொகை கொண்டது. உலகில் முதன்முறையாக பெண்கள் மட்டும் பங்கேற்க இருக்கும் இந்த பிரத்யேக நிகழ்ச்சியில், அவர்களின் அறிவுக்கூர்மை, விழிப்புணர்வு ஆகியவற்றை உலகிற்கு அடையாளம் காட்டும் விதமாக உருவாகிறது.இந்நிலையில் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி வெற்றியடைய பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ராதிகா சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.