வருசநாடு, நவ.12: வருசநாடு அடுத்த மயிலாடும்பாறை அருகே வவ்வால் தொல்லையால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே கோவிலாங்குளம், சிங்கராஜபுரம், வருசநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம் போன்ற பகுதிகளில் வவ்வால் தொல்லை இரவு நேரத்தில் அதிகரித்துள்ளது. இதனால் இலவம்பஞ்சு விவசாயிகள், வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஏராளமான நிலப்பரப்பில் இலவமரம் வளர்க்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக வவ்வால் அதிகரிப்பு காரணமாக இலவம்பஞ்சு, பீன்ஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளார்.