வாடிப்பட்டி, நவ.12: வாடிப்பட்டி அருகே சீரமைக்கப்படாமல் கிடந்த எட்டிகுளம் கண்மாயை குடிமராமத்துபணி மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கிராமபொதுமக்கள் சீரமைத்தனர். மதுரை வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி கிராமத்தில் எட்டிகுளம் கண்மாய் உள்ளது. சிறுமலை அடிவாரத்தில் உள்ள இக்கண்மாய் சுமார் 32ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 70ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெற்று வந்தன. மேலும் சாணாம்பட்டி, குரங்குதோப்பு, பெருமாள்பட்டி, சல்லக்குளம் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்துவந்தது. இக்கண்மாய் பருவமழை காலங்களில் சிறுமலையிலிருந்து வரக்கூடிய காற்றாற்று ஓடை வழியாக நீர் பெற்றுவந்தது. ஆனால், பல ஆண்டுகளாக கண்மாய் முறையாக தூர் வாரப்படாமலும், வரத்து கால்வாய் சீரமைக்கப்படாமலும், சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த காடாக காட்சியளித்தது. மேலும் பல ஆண்டுகளாக மழைபெய்தாலும் கண்மாய் நீரின்றி வறண்டு கிடந்தது.