நத்தம், நவ. 12: நத்தம் அருகே சிறுகுடியில் நடந்த சந்திவீரன் கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நத்தம் அருகே சிறுகுடியில் சந்திவீரன் சுவாமி, முரங்கன சுவாமி, புணரோத்தாரன செம்மாயி அம்மன் கோயில்கள் உள்ளன. இங்கு நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் செம்பாயி அம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் தேவதா அனுக்கைஞ, கிராம சங்கல்பம், விக்னேஷ்வர, புண்யாக வாசனம், தனபூஜைகள் நடந்தன. தொடர்ந்து கணபதி ஹோமத்தடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. முதல் கால யாக வேள்விகளை தொடர்ந்து இரவு பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலையில் கோ பூஜையை தொடர்ந்து யாகசாலையில் காசி, ராமேஸ்வரம், அழகர்கோவில் போன்ற புனித தலங்களில் இருந்து கொண்டு வந்து வைத்திருந்த புனித நீர் நிரம்பிய குடங்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக புறப்பாடாகி கோயில் உச்சியை சென்றடைந்தது.