தொழிலக பாதுகாப்பு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர், அக்.18: விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிலக பாதுகாப்பு மற்றும் கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர் அலுவலகங்களில் 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்எஸ்எல்சி.க்கு மேல் கல்வித் தகுதியுடைய பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்க விரும்புவோர் https://dish.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பம், கல்வித்தகுதிகள் விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுநகர் நடமாடும் கண்காணிப்பு குழு கூடுதல் இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுடையோர், கூடுதல் இயக்குநர் அலுவலகம், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், நடமாடும் கண்காணிப்பு குழு எண்.20, ஐசிஏ காலனி 2வது தெரு, விருதுநகர்-626001 என்ற முவகரிக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுடையோர் இணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், எண்.4, என்எஸ்பிஎன் ஆறுமுகம் நாடார் சாலை, பழைய ஸ்டேட் பேங்க் கட்டிடம், சிவகாசி, விருதுநகர்--626 123 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். சிவகாசி பயிற்சி மையம் சர்வே எண் 314/1, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி, ஆனையூர், சிவகாசி மேற்கு, சிவகாசி-626124 என்ற முகவரிக்கும் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் உரிய அலுவலகத்தில் அக்.31ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்தகவலை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: