திருவில்லிபுத்தூர், அக்.18: திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். சுமார் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளின் உடன் வந்தவர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.பெரும்பாலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் திறந்தவெளியில் படுத்திருப்பது அல்லது வராண்டாவில் படுத்திருப்பது அல்லது வேறு வழியில்லாமல் வீட்டுக்கு செல்வது என்ற நிலையே நீடித்து வந்தது. எனவே நோயாளிகளுடன் இருப்பவர்கள் தங்குவதற்கு மருத்துவமனை வளாகத்தில் இடவசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.