மாவட்டம் குண்டாஸில் வாலிபர் கைது

திருச்சுழி, அக்.18: திருச்சுழியில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் குண்டாஸில் கைது செய்யப்பட்டார். திருச்சுழி அருகே ஆலடிபட்டியை சேர்ந்தவர் வைரமுத்து. இவர் கல்குவாரி நடத்தி வந்த சாமுவேல் மரிய செல்வகுமார்  என்பவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு  விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் கொலை முயற்சி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளன. எனவே வைரமுத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் சிவஞானம், வைரமுத்துவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்பேரில்  விருதுநகர் சிறையில் இருந்த வைரமுத்துவை திருச்சுழி   காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: