தேனி, அக். 18: தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருதினை தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரிக்கு கிடைத்துள்ளது.உலக இளைஞர் பேரவை சார்பில் 2019ம் ஆண்டிற்கான தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருது தேர்வு சென்னையில் நடந்தது. இதில் 520 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளான்று சென்னையில் நடந்த விழாவில் தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருதினை சென்னை டிவிஎஸ் நிறுவன உபதலைவர் ரவிச்சந்திரன், அண்ணாபல்கலைக்கழகத்தின் சிஈடி இயக்குநர் ரவிக்குமார், உலக இளைஞர் பேரவை தலைவர் அன்பரசன், அருள் வழங்கினர். விருதினை தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர் ராஜ்குமார், கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் ஆகியோர் பெற்றனர்.மேலும், உலக இளைஞர் பேரவை சார்பில் தமிழக அளவில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான புராஜக்ட் எக்ஸ்போ மதுரையில் நடத்தப்பட்டது. இதில் டாக்டர். அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருதிற்கு 76 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.