பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் கலெக்டர் ஆய்வு

கமுதி, அக்.18:  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தை, கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பாஜக, காங். மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்கள் வருவார்கள். இதையொட்டி கலெக்டர் வீரராகவராவ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு பணி மேற்கொண்டார். இதில் தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, எஸ்.பி.ஓம் பிரகாஷ் மீனா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், தாசில்தார் மீனலோசனி,  பேருராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் வருவாய் துறை, பொதுப்பணித் துறை, மின்வாரியத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: