சாயல்குடி, அக். 18: முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணி நடந்தது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வளாகம், சார்நிலை கருவூல வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அலுவலர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்திரி முன்னிலை வகித்தார்.