கும்பகோணம், அக். 18: பிரதமரின் கவுரவ நிதி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் திருவிடைமருதுார் வட்டாரத்தில் தகுதியுள்ள விவசாயிகள் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் ஏற்கனவே தகுதியுள்ள விவசாயிகள் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள் சேர்க்கப்படாமல் விடுபட்டிருந்தால் அவர்கள் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சிட்டா ஆவணங்களுடன் அருகிலுள்ள பொது சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் WWW.PMKISAN.GOV.IN என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்.